மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் மீளவும் ஆரம்பம்!


கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான இ.போ.ச பேருந்து சேவைகள் வரும் 2021 ஜனவரி 1ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேற்படி தகவலை இ.போ.ச தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதன்படி ஜனவரி 1ம் திகதி தொடக்கம் நீண்ட துார சேவைகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும்.

இ.போ.ச தற்போது தனது வருமானத்தின் கால் பகுதியை மட்டுமே தற்போது பெற்றுவருவதாக கூறிய அவர், அதற்கு காரணம் பொது போக்குவரத்தின் மீது மக்களுக்குள்ள அச்சம் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மாற்று வழிகளை கையாண்டே மக்கள் பயணம் செய்துவருவதாகவும் அவர் அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.