வௌ்ளவத்தையில் உயிரிழந்த யாழ் யுவதி தொடர்பில் வெளியான தகவல்


நேற்று முன்தினம் கொழும்பு, வௌ்ளவத்தை கடலில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுவாமிநாதன் குசலா (41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த யுவதி முனைவர் பட்டத்திற்கான கற்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரின் மரணத்திற்கான காரணம் தெரியாத போதும், அவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகே வரை சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்துள்ளதாகவும், அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடல் பகுதியை நோக்கி சென்றதாகவும் சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.