கொவிட்-19 பயண விதியை நீக்கத் முதல்வர் டக் ஃபோர்ட் திட்டம்!


பியர்சன் விமான நிலையம் வழியாக திரும்பும் பயணிகள் மீது அமுல்படுத்தப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தலை அகற்றுவதற்கான தனது விருப்பத்தை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.

உண்மையில், அல்பர்ட்டா போன்ற சோதனை முறைகளைப் பின்பற்ற மாகாணம் எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட் கூறுகையில், ‘நீங்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும். அல்பர்ட்டாவில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் போலவே நாங்கள் அதைச் செய்ய விரும்புகிறோம்.

அல்பர்ட்டா முன்னோடித் திட்டம் தற்போது தகுதியான பன்னாட்டுப் பயணிகளை சில விமான நிலையங்களில் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர் சோதனை செய்கிறது.

பங்கேற்பாளர்கள் தங்கள் சோதனைகள் எதிர்மறையாக வந்தால் குறைந்த காலநேரத்திற்குத் தனிமைப்படுத்த முடியும்’ என கூறினார்.

பயணிகள் வெளியேறும்போது வெப்பநிலைச் சோதனைகள் உட்பட மேலும் பலவற்றைச் செய்ய மத்திய அரசாங்க விமான நிலையங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கருத்திலும் ஃபோர்ட் உடன்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.