ஜேர்மனியில் பொதுமுடக்கம் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிப்பு!


ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், பொதுமுடக்கம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொழில் நிறுவனங்களின் பணியாளர்களை அவர்களது இல்லங்களில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 1,105,832பேர் பாதிக்கப்பட்டதோடு, 17,812பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.