கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 582 பேர் குணமடைவு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 582 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்ணை 38 ஆயிரத்து 59 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் 29 ஆயிரத்து 300 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 576 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.