கலால் திணைக்களத்தின் அறிவிப்பு!


மதுபானசாலைகளை மூடுவது குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் மதுபானசாலைகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் தற்போது வரை இயங்கி வருவதாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டிகை காலங்களில் மதுபான சாலைகளை மூடுமாறு சில குழுக்கள் ஊடகங்கள் மூலம் கோரிக்கைகள் விடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் அலையின் போது மதுபானசாலைகள் மூடப்பட்டன என தெரிவித்துள்ளார்.

இதனால் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் மதுபானசாலைகள் மீள மூடப்பட்டால் அவ்வாறானதொரு நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளிலும் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளைத் தவிர பண்டிகை காலங்களில் மதுபானசாலைகளை மூட எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.