கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 94.93ஆக உயர்வடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 33,136 பேர், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,57,464 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.93 ஆக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 3,56,546பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.62 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மராட்டியத்துல் 80 பேரும்,டெல்லியில் 47 பேரும், கேரளா,மேற்கு வங்கத்தில் 44 பேரும்,கேரளாவில் 32 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 31 பேரும், பஞ்சாப்பில் 21 பேரும் உயிரிழந்தனர்.
மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 98,57,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 391பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,43,019ஆக உயர்ந்துள்ளது” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை