COVID-19 தடுப்பூசி திட்டத்தை வெளியிடுகிறது பிரேசில் !


பிரேசிலில் 2021 ஆம் ஆண்டு முதல் 6 மாத காலப்பகுதிக்குள் 51 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில், சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக 108 மில்லியன் மருந்துகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நடக்க பிரேசில் உள்ளது, அங்கு இதுவரை 180,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த ஆண்டு COVID-19 க்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என கடந்த வியாழக்கிழமை, சுகாதார அமைச்சர் எட்வர்டோ பசுவெல்லோ உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.