நுவரெலியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்தது


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலை பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதில் நுவரெலியா மாவட்டமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை), புதிதாக 6பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இதுவரை, 311பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்டத்திலுள்ள 4  தோட்டங்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலோர்,  கொழும்பு பகுதியில் இருந்து இப்பகுதிகளுக்கு வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.