மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 476 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிலிருந்து 130 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 45பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 7பேர் இவ்வாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தினூடாக, இன்று காலை 294 பேர், மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 288இலங்கையர்கள், இன்று காலை மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை