மஹர சிறைச்சாலை விவாகரத்தில் கொதித்தெழுந்த சஜித்!


இலங்கை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து சிறைச்சாலை கைதிகள் கலவரத்தை ஏற்படுத்துவது தொடர்ச்சியாக காணப்படுகிறது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலை கலவரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளைப் பார்க்கின்றபோது மீண்டும் இலங்கையில் அரச பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது என்றே உணரப்படுகின்றது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

“எமது நாட்டில் 1877ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தில் மூன்று பிரிவுகள் கடந்த சில நாட்களாக மீறப்பட்டுள்ளன.

மஹர சிறைச்சம்பவத்திற்குப் பின்னால் இரத்தத்தை காண்பதற்கு வெறியேற்படும் வில்லைகள் என்று சிலர் தெரிவித்திருந்ததுடன், சர்வதேச அரங்கில் இலங்கையை கௌரவப்படுத்தும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எனினும் அந்த கைதிகள் பி.சி.ஆர் பரிசோதனையை நடத்தும்படியே கோரியிருந்தனர். கைதிகளின் சுகாதாரத்திற்குப் பொறுப்பாகவுள்ள மருத்துவர்தான் வெலிக்கடை சிறையிலிருந்து 120 கைதிகளை மஹர சிறைக்கு மாற்றியிருந்தார்.

அவர் வியத்மக என்கிற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைப்பில் அங்கத்தவர். அதன் காரணமாகவே மஹர சிறையிலும் கொரோனா கொத்தனி ஏற்பட்டது.

எமது நாட்டில் அரச பயங்கரவாதம், கொலைக் கலாசாரத்தை தலைதூக்க நாங்கள் இடமளிக்கமாட்டோம். இரத்தம் காணும் வில்லை என்று சிலர் கூறுவதை நாங்கள் மறுக்கின்றோம். கண்டிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

எனினும் இதற்கு பதிலளித்து உரையாற்றிய ஆளுங்கட்சி பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, எதிர்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை நிராகரித்தார்.

மாறாக இரத்தம் காணும் வில்லைகள் குறித்து போலிப்பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், நல்லாட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் எந்தவொரு சிறைச்சாலையும் நிர்மாணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.