யாழில் தந்தை திடீர் மரணம் மகள் தனிமைப்படுத்தலில்!


யாழ் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உடபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அவர் அண்மையில் கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு திரும்பியுள்ளார்.

இதேவேளை அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி

இதையடுத்து கொழும்பில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

இதையடுத்து புலோலியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். புலோலியிலும் அவர் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவரது தந்தை இன்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த முதியவருக்கு நீண்ட நாட்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரது மகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே அவரது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.

கொரோனா தொற்றுப் பாதிப்பினாலேயே உயிரிழந்தார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.