லண்டனில் காத்திருந்த கணவன் - வேறொருவரை திருமணம் செய்த பெண்!


லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபரிடமிருந்து பணத்தை பெற்று சுபபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் தற்போது வேறொருவரை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லண்டனில் வசித்து வரும் 35 வயது யாழ்பாணத்தை சேர்ந்த நபருக்கு, வவுனியாவை சேர்ந்த 23 வயது பெண்ணிற்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் இருவரும் தொலைபேசியூடாக பேசிவந்துள்ளனர்.

இந்த நிலையில், லண்டனிலிருக்கும் நபர் குறித்த பெண்ணுக்கு ஐ-போன், கார் என பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்தத பெண், தற்போது வவுனியாவிலுள்ள இளைஞன் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் இந்த செயலால் லண்டனிலுள்ள மணமகன் மற்றும் குடும்பம், பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு கொடுத்த போன் மற்றும் கார்களை திரும்பப்பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.