இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது.
இன்றைய தினம் 5 மரணங்கள் பதிவாகியுள்ள உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்வடைந்துள்ளது.
இதனடிப்படையில், தர்கா நகரை சேர்ந்த 72 வயது ஆண், ஹோமாகம பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், கொழும்பு 5ஐ சேர்ந்த 61 வயது பெண், குருநாகல்-கலேவல பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியை சேர்ந்த 75 வயது ஆண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை