வருட இறுதி நாளில் பொலிஸார் விடுத்த அவசர கோரிக்கை!


சமூக வலைத்தளங்களின் ஊடக பல்வேறு மோசடிகள் இடம்பெறுவது அதிகரித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதன்படி தற்போது, சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு போலித் தகவல்களை வழங்கி நிதி மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டுளனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் வருட இறுதி நாள் என்ற காரணத்தினால், மக்களை ஏமாற்றும் வகையில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பரங்கள் வெளியாகக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசிக்கு அல்லது வட்ஸ்ஏப், உள்ளிட்ட இணையத்தள செயலிகளுக்கு பணப்பரிசினை வென்றுள்ளதாக குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

குறித்த பணப்பரிசினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இதனை நம்பி மக்களும் பணத்தை வைப்பிலிடுகின்றனர்.

எனவே, இவ்வாறு சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு இணங்க, பணங்களை வைப்பிலிட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நைஜீரிய பிரஜை ஒருவரினால், அண்மையில் இலங்கை பெண்ணொருவரிடம் சமூக வலைத்தளத்தின் ஊடாக, மூன்று கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.