சிட்னி தண்டர் அணி 129 ஓட்டங்களால் அபார வெற்றி!


பிக் பேஷ் ரி-20 தொடரின் 14ஆவது லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணி 129 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி தண்டர் அணியும் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஒலிவர் டேவிஸ் 48 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் மற்றும் பீட்டர் ஹட்சோக்லோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வில் சுத்தர்லேண்ட் மற்றும் நபி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, 12.2 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் சிட்னி தண்டர் அணி 129 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 20 ஓட்டங்களையும் லிலே ரொசவ் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், டன்வீர் சங்கா 4 விக்கெட்டுகளையும் ஆடம் மில்ன் மற்றும் கிறிஸ் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டேனில் சேம்ஸ் மற்றும் நாதன் மெக்ஹென்ரிவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஒலிவர் டேவிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.