கணவன் - மனைவி சடலமாக மீட்பு!


மினுவாங்கொடை – ஒபான பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இத்தகவலை பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் நிலவிய தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன், மனைவியின் கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளதுடன், பின்னர் தாமும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த கணவருக்கு 45 வயது எனவும் மனைவிக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தமபதிகளுக்கு இரு புதல்விகள் உள்ளதாகவும் கூறிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.