ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி – பரிசோதனை முடிவுகள் வெளியாகின!


ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா தங்கள் தடுப்பூசியின் இறுதி கட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

குறித்த தடுப்பூசி ஒட்டுமொத்தமாக 70 சதவீதமாக பயனளிப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்தை தயாரித்தன.

கடந்த 8 மாதங்களாக குறித்த தடுப்பூசி மூன்று கட்டங்களாக உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டது. அதன் இடைக்கால பரிசோதனை அலசல்கள் லான்செட் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் பிரேசிலைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தி பரிசோதித்ததன் மூலம் கிடைத்த தகவல்கள் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தடுப்பூசி 70 சதவீதம் பயனளிப்பதாக தகவல்களை ஆய்வு செய்த வெளி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசி பெற்றவர்களை இரண்டு குழுக்களாக பிரித்துள்ளனர். ஒரு குழுவுக்கு வழக்கமான மருந்தும் அதனைத் தொடர்ந்து பூஸ்டர் மருந்தும் வழங்கப்பட்டது.

2-வது குழுவுக்கு முதலில் குறைந்த அளவு தடுப்பூசி தந்துள்ளனர், பின்னர் வழக்கமான தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறைந்த அளவு தடுப்பூசி பெற்ற 2-வது குழு 90 சதவிகித செயல்திறனைக் காட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2 டோஸ் மருந்து அளிக்கப்பட்டவுடன் 70 சதவீதமானவர்கள் கொரோனா அறிகுறிகளில் இருந்து தப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.