அவதூறு பரப்பிய இளைஞனை துவம்சம் செய்த யாழ் யுவதி!


போலி முகப்புத்தகத்தின் ஊடாக தன் மீது அவதூறு பரப்பிய இளைஞனை வீடு புகுந்து யாழ் யுவதியொருவர் துவம்சம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

இருவரும் சிலகாலம் காதலித்த நிலையில் குறித்த இளைஞனின் நடத்தையில் அதிருப்தியடைந்து யுவதி பிரிந்து சென்றுள்ளார்.

அதன்பின்னர் கடந்த சில வாரங்களாக போலி முகநூல்களில் யுவதியின் மார்பிங் செய்யப்பட்ட படங்களும், அவதூறுகளும் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தனது நண்பியொருவருடன் முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்ற யுவதி வீட்டிலிருந்த தும்புத்தடியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து திடீர் கூச்சலால் அயலில் உள்ளவர்கள் அங்கு கூடியதையடுத்து பரபரப்பான நிலைமையேற்பட்டது.

இளைஞனின் சகோதரன் திருமணமாகி பிற இடமொன்றில் வசிப்பதுடன், அரச உத்தியோகத்தராகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் தாயார் வீட்டுக்கு வந்த போது அசம்பாவித்தை கண்டு நிலவரத்தை சமாளித்துள்ளார்.

முகநூலில் அவதூறு பரப்புவது குற்றமென்பதை சகோதரன் குறிப்பிட்டதுடன், அப்படி செய்யாவிட்டால் வீடு புகுந்து தாக்கிய யுவதிகள் மீது பொலிஸ் முறைப்பாடு செய்யலாமெனவும் சகோதரனை அழைத்தார்.

அத்துடன், யுவதிகள் குறிப்பிடுவதை போல முகநூலில் அவதூறு பரப்பியிருந்தார் தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வலியுறுத்தனார்.

இதற்குள் யுவதியின் உறவினர்கள் சிலரும் அங்கு கூடிவிட நிலவரம் மேலும் பதற்றமானது.

இதையடுத்து இளைஞன் தானே அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டு யுவதிகளிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து இரு தரப்பு பெரியவர்களும் இணைந்து நிலைமையை சுமுகமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.