பாடசாலை மாணவியுடன் மரத்தில் பரண் அமைத்து வாழ்ந்த இளைஞன்!


தென்னிலங்கையில் லுணுகம்வெரவில் பேஸ்புக் காதலியை இரகசியமாக அழைத்து வந்து மரத்தில் பரண் அமைத்து வாழ்ந்து வந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கின் ஊடாக காதல் வசப்பட்ட 24 வயதான இளைஞன், கடந்த 8 ஆம் திகதி மாணவியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார்.

காதலியுடன் தங்குவதற்காக அம்பலாந்தோட்டைக்கு சென்று அங்குள்ள தோட்டமொன்றில் நின்ற மரத்தில் பரண் அமைத்திருந்தார். 2 நாட்கள் இருவரும் பரணில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் ஒன்றரை வருடங்காக தாம் பேஸ்புக்கில் காதலித்து வருவதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து இளைஞன் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியை நீதித்துறை மருத்துவ அதிகாரி முன் ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.