மாத்தறை மாவட்டத்தில் தினமும் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!


மாத்தறை மாவட்டத்தில் தினமும் 20 தொடக்கம் 30 பாடசாலை மாணவர்கள் தலைசுற்று மற்றும் கண் வலி போன்ற அறிகுறிகளினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் தற்போது பல பகுதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.எனினும் கல்வி செயற்பாடுகள் இணையவழி ஊடாக தொடர்கின்றன.

இதன் காரணமாக, தொடர்ச்சியாக கைத்தொலைபேசி அல்லது கணினிகளை பார்த்து கற்றுவருவதால் இவ்வாறு 20 தொடக்கம் 30 மாணவர்கள்வரை தினமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக மாத்தறை மாவட்ட வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணரான பிரியங்க இத்தவல தெரிவித்தார்.

இவர்களுக்கு குறிப்பாக வாந்தி, கண்வலி, தலைச்சுற்று, கண்களில் தானாகவே கண்ணீர் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஒன்லைன் ஊடாக கற்றுவருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இவ்வாறு இணையமூலமாக கற்றலில் ஈடுபட்டுள்ளவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருதடவை ஓய்வெடுக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.