சின்னதிரை நடிகை சித்ராவின் தோழி சரண்யா வெளியிட்ட தகவல்!


பிரபல சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக தெரியவில்லை என்று அவரது தோழியான சரண்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“சித்ராவை எனக்கு 2 வருடங்களாக தெரியும். எனக்கு நேற்று தான் பதிவு திருமணம் செய்து கொண்டமை தெரியும்.

பொதுவாக அவர் எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இந்த காதல் விவகாரத்தை மட்டும் அவர் யாரிடமும் வெளிப்படையாக பேசவில்லை.

அவரது உதவியாளரிடம் முக்கிய ஆவணங்களை கொண்டு வருமாறு கூறினார். நேற்று அவர் இயல்பாக இல்லை. மிகவும் டென்ஸனாக இருந்தார்கள். எனக்கு தெரிந்து அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, இது தற்கொலை இல்லை என்று தான் நினைக்கிறேன்.

கடைசி நாள் என்னை பார்த்தபோது எதிர்கால திட்டத்தை பற்றி நிறைய பேசினார். அவர் இப்படி ஒரு தப்பான முடிவை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை“ என சரண்யா தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.