அரசியல் கைதிகளை விடுதலை செய்ய 15 MPகள் கடிதம்!
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.எ.சுமந்திரன், வினோ நோகராதலிங்கம்,
கோ.கருணாகரம், சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞனம் சிறீதரன், சாணக்கிய ராகுல இராஜபுத்திரன், தவராசா கலையரசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சி.வி.விக்கினேஸ்வரன், மனோகணேசன், வே.இராதாகிருஸ்ணன் ஆகிய 15 பேரின் கையொப்பங்களுடன் கையளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை