இலங்கை கடற்படையினரால் 36 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது.
நெடுந்தீவில் வைத்து இவர்கள் நேற்று முன்தினமும், நேற்று நள்ளிரவிலும் கைதாகியுள்ளனர்.
இவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்ட 08 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு இன்று முற்பகல் உறுதிசெய்தது.
அத்துடன் சில படகுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் உள்ள நிலையில் அவற்றை கரைக்கு இழுத்துவரும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள இந்த 36 இந்திய மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டபின்னர் பொலிஸாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை