மௌனம் - கவிதை!!

 


மெளனத்தின் மீது

நிசப்த உளி

அசப்த ஒலி

மெளனம் சில்லுச் சில்லாய்

பெயர்கிறது

பெயர்ந்த மெளனங்கள்

தன் பெயரை மாற்றிக் கொள்ளாமல்

மெளனங்களாகவே ஆழ்ந்தன

ஒவ்வொரு மெளனத்திடமும்

ஒரு பேச்சுவார்த்தை

மெளனம் கடைசி வரை

பதில் சொல்லவேயில்லை

வழக்கிற்கு சென்ற மொழிகள் எல்லாம்

மெளனத்தின் மீது

புன் முறுவலை

பரிசளித்துத் திரும்பின...


#அஹமது_அலி


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.