எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரக் கணிப்பு!


 உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நாளை செவ்வாய்க்கிழமை நேபாளம்  அறிவிக்கவுள்ளது.

இந்த சிகரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் 1954 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி  சாகர்மாதாவின் சிகரத்தின் உயரம் 8848 மீற்றர் என்றும் அதாவது 29 ஆயிரத்து 26 அடி என்றும் கூறப்பட்டது.

சாகர்மாதா எவரெஸ்ட் சிகரத்தின் நேப்பாளப் பெயராகும்.

எவரெஸ்ட் சிகரம் (Mount Everest)

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது

இந்த குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேபாள அரசு நாளை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இருந்த 8840 மீட்டருக்கும் குறைவாக எவரெஸ்ட் சிகரம் இருக்குமா என்பது நாளை தெரியவரும்.சாகர்மாதா எவரெஸ்ட் மலையின் நேப்பாளப் பெயராகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.