வலி வடக்கு தவிசாளரின் வாகனம் தாக்கப்பட்டது!


 வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் பயணித்த வாகனம் மீது நேற்று (20) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இளவாலை – வசந்தபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தலைக்கவசத்தால் வாகனத்தின் கண்ணாடியை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.