ஐவர் கொரோனாவால் பலி!


 இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (18) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை – அகலவத்தையை சேர்ந்த 50 வயது ஆண் மற்றும் மாக்கொனயை சேர்ந்த 72 வயது ஆண், கம்பஹா – வாத்துப்பிட்டிவலயை சேர்ந்த 86 வயது ஆண், கொழும்பு – மஹரகமையை சேர்ந்த 76 வயது ஆண், கொழும்பு 15ஐ சேர்ந்த 86 வயது பெண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்றுடன் மணரமடைந்த 46 நாட்களேயான சிசுவின் மரணம் இன்றைய உத்தியோகபூர்வ அறிவிப்பில் இணைக்கப்படவில்லை.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 165 பேர் மணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 12 பேர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.