வெடிமருந்தை கிரைன்டரில் அரைத்த 8 பேர் காயம்!


 யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் டைனமட் தயாரிப்பதற்காக ரி.என்.ரி வெடிமருந்தை கிரைன்டரில அரைத்த நபர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று முன் தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கட்டியாக இருந்த வெடி மருந்தை தூளாக்கும் நோக்கில் கிரைன்டரில் அரைத்த போது வெடித்து சிதறியுள்ளது.

இதனால் 8 பேர் காயமடைந்த நிலையில் சிலின்டர் வெடித்து காயமடைந்ததாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பொலிஸாரால் இந்த விடயம் கண்டறியப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.