பொன்னாலை வரதராஜப் பெருமாள் தனிமைப்படுத்தல்!


 பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின் போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தில் மகோற்சவ கிரியைகளை நடத்திய அர்ச்சகர்களும் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களும் ஆலயத்திலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தேர், தீர்த்த உற்சவ உபயகாரர்கள், மகோற்சவ ஆரம்பம் தொடக்கம் முடிவடையும் வரை தொடர்ந்து ஆலயத்திற்கு வருகைதந்தவர்கள், தீர்த்தோற்சவத்தின் போது கடலில் மிக நெருக்கமாக நின்றவர்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலுக்கு அமைய சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொ.யசிதரனின் வழிப்படுத்தலில் பொன்னாலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ச.சர்மிலன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.