வீடு இடிந்து விழுந்ததில் கணவன் மனைவி பரிதாபமாக பலி!
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
அத்துடன் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 12 வீடுகளும், திருவையாறு பகுதியில் 8 வீடுகளும், கும்பகோணத்தில் 3 வீடுகளும், பேராவூரணி பகுதியில் 2 வீடுகளும் என மொத்தம் 25 வீடுகள் இடிந்தன.
இதற்கிடையில் கும்பகோணம் எலுமிச்சங்காபாளையம் சிவஜோதி நகரைச் சேர்ந்த குப்புசாமி (70), இவரது மனைவி யசோதா (65) இருவரும் மண்சுவரால் ஆன அவர்களது ஓட்டு வீட்டில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.
இதன்போது தொடர் மழையால் அவர்கள் வீட்டின் மண்சுவர் ஈரமானதை அடுத்து கூரையும், சுவரும் இடிந்து இருவர் மீதும் விழுந்ததில் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
மேலும் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தத்தில் ஒருசிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை