மாகாண சபை அதிகாரம் வழங்க முடியாது!


 இந்திய – இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. மாகாணாசபை மூலம் நாட்டை பிரித்து வழங்க முடியாது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அம்பாறையில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“ஒரே நாடு ஒரே கொள்கை என்பதே ஜனாதிபதியின் கொள்கை என்பதால், மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன். 9 மாகாணங்களாலும் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின், ஒரே நாடு ஒரே கொள்கை பொய்யாகிவிடும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் படி, விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவது, மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, வடக்கில் வாழ்ந்த மக்களை மீள்குடியேற்றுவது ஆகிய மூன்று நிபந்தனைகளை இந்தியாவில் நிறைவேற்ற முடியாமற்போயுள்ளது.

குறித்த உடன்படிக்கை நடைமுறையில் இல்லாத நிலையில், மாகாண சபை முறைமைக்கு இணங்கி, மாகாண சபைகள் மூலமோ, அரசியலமைப்பின் மூலமோ நாட்டை எவருக்கும் வழங்க முடியாது. மாகாண சபைகள் முறைமையினால் நாட்டில் உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமடைந்தவர்களுக்கு அவமரியாதை ஏற்படும்.” – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.