உளவுத்துறை அதிகாரியின் மனைவி தற்கொலை!


 தமிழகத்தில் கணவனுடன் வசித்து வந்த மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹரிஸ்குமார்(30) என்பவர் சென்னை, அடையாறு ராஜாஜி பவனிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவருகிறார்.

இவருக்கும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிகிதா(23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்கள் பணி நிமித்தம் காரணமாக, சென்னை பெசன்ட் நகர், பஜனைக் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25-ஆம் திகதி நிகிதா வீட்டின் படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, நிகிதா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது என்றும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் பொலிசார் இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

அதில், நிகிதாவின் குடும்பத்தினர் வரதட்சணைக் கொடுமை, மதமாற்றம் போன்றவை தான் காரணம் என்று கூறியுள்ளனர்.

மேலும், நிகிதாவின் கணவர் ஹரிஸ்குமார், மாமியார் ரமணி ஆகியோரிடம் விசாரித்த போது, நிகிதாவுக்கு திருமணத்தின்போது லட்சக்கணக்கில் வரதட்சணையாகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைகளும் சீர்வரிசைப் பொருள்களும் நிகிதாவின் குடும்பத்தினர் கொடுத்திருக்கின்றனர்.

அதன் பிறகும் நிகிதாவிடம் ஹரிஸ்குமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தி வருவதாகவும், திருமணமாகி ஒராண்டே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.