இளம்பெண வீதியில் வைத்து சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் இந்து, கிருஸ்தவம், சீக்கியம் போன்ற சிறுபான்மை மதத்தை சேர்ந்த இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பெரும்பான்மை இஸ்லாமிய மதத்தினரால் கட்டாய திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் அங்கு கட்டாய மதமாற்றம், திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இளம்பெண்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ராவல்பெண்டி நகரை சேர்ந்த கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்களுக்கு மொத்தம் 6 மகள்கள் உள்ளனர். அவர்களில் 24 வயதுடைய பெண் பிள்ளை மூத்த மகளாக காணப்பட்டாள்.
இதற்கிடையில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவர் கடந்த 5 மாதங்களாக குறித்த யுவதிக்கு பின் தொடர்ந்து தொல்லைகொடுத்துள்ளான்.
மேலும்,குறித்த பெண்ணை மதமாற்றம் செய்து தனக்கு திருமணம் செய்து தரும்படி பெண்ணின் பெற்றோரிடம், அவர் தன் பெற்றோருடன் சென்று பெண் கேட்டபோது, பெண் மறுப்பு தெரிவித்துள்ளத்தோடு அவளின் பெற்றோரும் மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் தனது நண்பனுடன் இணைந்து அந்த பெண்ணை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துவந்த நிலையில், கடந்த 30-ம் திகதி காலை பெண்ணின் வீட்டிற்கு தன் நண்பனுடன் வந்த குறித்த இளைஞன், குறித்த பெண்ணுக்கு துப்பாக்கியால் பலமுறை தலையில் சுட்டுள்ளான்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
மாற்றுமத நபரை கட்டாய மதம்மாறி திருமணம் செய மறுப்பு தெரிவித்த சோனியா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த இரு மதங்களுக்கும் முன்னரும் இதேபோன்று 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை