உலமாக்கள் நான்குபேருக்குத் தடை - 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை!!
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 4 முக்கிய உலமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முப்தி யூசுப், எம்.எல்.வி. அப்துல் கலிக், எம்.எல்.வி முனீர் முலாஃபர், Shk.Faleel இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் பல்வேறு மார்க்க தெளிவு, ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த காலங்களில் உரையாற்றி வந்துள்ளார்கள்.
இந்த நிலையிலேயே அவர்களுக்கு தற்போது இத்தடை விதிக்கப்பட்டள்ளது. இனிமேல் வரும் காலங்களில் இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடந்த முடியாது.
இவர்களின் பழைய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படாது என அறிய வருகிறது.
அத்துடன முஸ்லிம் சேவையில் பணியாற்றிய 2 முக்கிய அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை