மாணவன் வகுப்பறையில் மயக்கமுற்ற நிலையில் கொரோனா என கண்டறிவு!
ஹற்றனிலுள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் பாடசாலை நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட்-19 தொற்றிருப்பது உறுதியானது.
இதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை