சொக்லேற் கனவுகள் 16 - கோபிகை!!


'கனிகா,.......

சொல்ல வந்ததை 

சட்டென்று சொல்லு....

சுத்தி வளைக்க வேண்டாம்,'

கோபமாய் இரைந்தான். 


'நான் உங்களைத் தானே,

சந்திக்க வரச்சொன்னன், 

நீங்கள் ஏன்

அந்த வானரத்தையும்

இழுத்துக்கொண்டு வந்தனீங்கள்?'


'கனிகா....பாத்துக்கதை,

என்ன சொன்னாய்?'

'அனுதி..அனுதியைப்பற்றி...'

இழுத்தான்....


'எடுத்ததை சொல்லுங்கோ....

சொல்லி முடியுங்கோ,

அனுதியைப் பற்றி கதைச்சா

அடிச்சுப் போடுவீங்களோ???'


'நான், உன்னில 

நிறைய மரியாதை

வைச்சிருக்கிறன் கனிகா,

அதைக் கெடுத்துப் போடாதை'


'எனக்கென்னத்துக்கு 

உங்கட மரியாதை?'

எனக்கு ஒரே ஒரு 

முடிவுதான் தெரியவேணும்....'


'என்னது?'

அவசரமாய் கேட்டான்.

'உங்களுக்கு

நான் முக்கியமா?'

'அனுதி முக்கியமா?'


'அனுதிதான் ....

அதில என்ன சந்தேகம்?'

நொடிகூட தயங்காமல்

சொல்லிவிட்டான் 

ஆதித்தன். 


'பிறகு எதுக்கு என்னட்ட....?'

சொல்லாமல் இழுத்தாள்,

ஏனென்றால் 

இது வரை காதலைப்பற்றி

ஆதித்தன் எதுவும் 

சொன்னதில்லையே, 


ஆழமான பார்வை,

சின்னச் சிரிப்பு, 

இவளைக் கண்டதும்

அவசரமாய் செய்யும்

அந்த தலைகோதல்.....

இவை மட்டும் தானே, 

அவனுடைய நேசத்தை

அவளுக்கு உணர்த்தியவை.


கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.