விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி!

 


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனா்.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர விவசாயிகள் மும்பை ஆஸாத் மைதானத்தில் மிகப்பெரிய பேரணியை ஜனவரி 25-இல் நடத்தவுள்ளனா்.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கவுள்ளனா்.

அதன் ஒரு பகுதியாக நாசிக்கைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டா் மற்றும் டெம்போ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சனிக்கிழமை புறப்பட்டுள்ளனா்.

ஜனவரி 25-இல் நடைபெறும் இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவா் சரத் பவாா் மற்றும் ஆளும் மகா விகாஸ் ஆகாடி (எம்விஏ) கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.