வெள்ளம் காரணமாக 3 ஆயிரத்து 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிப்பு!


மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட விவசாய செய்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக மூவாயிரத்து எண்ணூற்றி ஐம்பது ஏக்கர் விவசாய செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரிவில் பதினையாயிரத்து ஐநூறு ஏக்கர் விவசாய செய்கை வெள்ளத்தினாலும், கபில நிற தட்டு நோய் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விவசாய செய்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், வெள்ள நீரின் காரணமாக வரம்பிலுள்ள மணல்கள் முழுவதும் வேளான்மையை மூடிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெள்ள நீர் சில வயல் நிலங்களில் தேங்கி காணப்படும் நிலையில் வேளான்மை கதிருடன் நீரில் வீழ்ந்து கிடப்பதால் வேளான்மை அழிவடைந்துள்ளதாகவும் கபில நிற தட்டு நோய்த் தாக்கம் காரணமாக சில வேளான்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் கபில நிற தட்டு நோய் காரணமாக இம்முறை எதிர்பார்க்கப்படும் விளைச்சல் கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.