நேற்று மட்டும் 627 பேருக்கு கொரோனா!
இலங்கையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,901 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை