திரு செல்லத்துரை கணேசலிங்கம் 31ஆம் நினைவுநாள்!

 

 யாழ். வேலணை மேற்கு சிற்பனை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், கைதடியை  தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணேசலிங்கம் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் 24.01.2021 அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  



அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே 
பாச நினைவுகள் தான் 
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும் 
முப்பத்து ஒரு நாள் சென்றாலும் ஆறவில்லை 
மனது
நாட்கள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது உங்கள் நினைவுகள் 
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் 
   
தகவல்: சிவா குடும்பத்தினர்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.