சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் மேலும் 31 பேர் கைது!
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அதில் 2 ஆயிரத்து 500 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையோர்கள் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை