கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு!


கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஔடதத்தை தயாாித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இவருக்கு எதிராக கேகாலை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விசாரணைகளின் பின் தம்மிக்க பண்டார அநேகமாக கைதாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்மிக்க பண்டாரவால் தயாாிக்கப்பட்ட ஔடதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சென்ற சிலருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு இருப்பினும் இன்றைய தினமும் அநேகமான மக்கள் இவரின் ஔடதத்தை கொள்வனவு செய்வதற்காக இவரது வீட்டின் முன் கூடியிருப்பதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.