இனப் படுகொலையை உரத்து சொல்லிக்கொண்டு இருக்கும் என்ற அச்சமே!!


 யாழ்ப்பாணம் பல்கலைகழக வளாகத்தில் நிர்மாணிக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் தூபி அழிப்பு அவை இந்த நாட்டின் சிங்கள பௌத்த இனவாத ஆட்சியின் இனப் படுகொலையை உரத்து சொல்லிக்கொண்டு இருக்கும் என்ற அச்சமே காரணம் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார் .


இந்த கொடூரசிந்தனையும் செயலும் மேலும் ஒரு வரலாறு என்பதை அவர்கள் சிறிதேனும் உணரவில்லை.இதனால் இந்த ஆட்சியும் அவர்களது அடிவருடிகளும் சாதித்தது உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் வெறுப்பையும்  எதிர்ப்பையும் தவிர வேறெதுவுமில்லை.  


எந்த தமிழ் அதிகாரியும் எத்துணை விசுவாசம் காட்டினாலும்  இறுதியில் அவர்களை சிங்கள இனவாதம் காரியம் முடிந்ததும் பொத்தெண்டு கைவிடுவதே வரலாறு  இந்த கொடுமையை நிறைவேற்றியவர்கள் எல்லோரும் மிக விரைவில் தாமே மனம் வருந்தும் காலம் மிக விரைவில் வரும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.