நெல்லியடி பொலீஸாரினால் நடாத்தப்படும் விழிப்புணர்வு!!

 


நெல்லியடி பொலீஸாரினால் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.


இச்செயற்பாடு நேற்று கரணவாய் பகுதியிலும் நடைபெற்றதுடன் இன்று கரவெட்டி மத்தொனி பகுதியில் நடைபெறவுள்ளது . தற்போது மக்கள் எதிர்கொள்ளும் களவு மற்றும் கொரோனா போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பாக கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நெல்லியடி பொலீஸாரால் நடைபெற்று வருகின்றது. நேற்று J/351 கரணவாய் கிழக்கு கிராம அலுவலர் காரியாலயத்தில் நடைபெற்றது. இன்று பிற்பகல் 4 மணிக்கு கரவெட்டி மத்தொனி நவசக்தி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.  மக்கள் நெல்லியடி நிலைய 0212263222 எனும் இலக்கத்துடனோ அல்லது நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  0773529893 தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.