கொழும்பு நகரசபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை!
கொழும்பு நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே மற்றும் 9 பேரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மன்றில் முன்னிலையாக தவறிய நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை