பிரேஸிலில் கொரோனாவால் 90இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!


பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் 90இலட்சத்து 485பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மூன்றாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை ஒரு இலட்சத்து 53ஆயிரத்து 885பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 63ஆயிரத்து 895பேர் பாதிக்கப்பட்டதோடு ஆயிரத்து 319பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பது இலட்சத்து 81ஆயிரத்து 593பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் 77இலட்சத்து 98ஆயிரத்து 655பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.