இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிகக் குறைவு!


மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவாகவுள்ளதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

கொரோனா பரவ தொடங்கியது முதல் கடந்த ஓராண்டாக தடுப்பு பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் உலகளவில் இந்தியாவில்தான் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு.

இந்தியாவில் 2,300 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்க மட்டுமின்றி, அதனை உரிய முறையில் செலுத்தவும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ந் திகதி போலியோ தடுப்பூசி போடப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.