பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றி!


பிக் பேஷ் ரி-20 தொடரின் 28ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், சிட்னி தண்டர் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி தண்டர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலெக்ஸ் ஹேல்ஸ் 46 ஓட்டங்களையும் டேனில் சேம்ஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் ஸ்டெக்கீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சேவியர் பார்ட்லெட், வில்டர்முத் மற்றும் கிரிகோரி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ பர்ன்ஸ் 50 ஓட்டங்களையும், ஜோ டென்லி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், டன்வீர் சங்கா 3 விக்கெட்டுகளையும் நாதன் மெக்கேவ் மற்றும் கிறிஸ் கீரின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 2 விக்கெட்டுகளை சாய்த்த முஜிப் உர் ரஹ்மான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.