மேல்மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பது குறித்து புதன் பேச்சு!


அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சுகாதார அதிகாரிகள், ஜனாதிபதி செயலணி மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்காக சுகாதார ஆலோசனையின் பிரகாரம் கடுமையான திட்டம் வகுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.